News March 24, 2024
அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி

ஈரோடு மக்களவைத் தேர்தல் பணியில் 10, 970 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். அவர்களுக்கு நான்கு கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது. அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி இன்று ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஓரிடத்தில் முதல் கட்ட பயிற்சி நடந்தது. கோபி சாரதா பள்ளியில் நடந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டார்.
Similar News
News January 1, 2026
BREAKING: கொடுமுடி அருகே பெண் தாசில்தார் உயிரிழந்தார்

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தனி வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் பால முருகாயி. உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் டிஎன்பிஎஸ்சி-ல் தேர்ச்சி பெற்று முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News January 1, 2026
ஈரோடு அருகே விபத்து: பெண் பலி

ஈரோட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி நித்யா. இவர்களது உறவினர் சேலத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அவரது மனைவி மஞ்சுளா. இவர்கள் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் ஈரோடு வந்தனர். அப்போது மேட்டூர் சாலையில் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்த போது, அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்து மோதியது. இதில் மஞ்சுளா சம்பவயிடத்திலே உயிரிழந்தார். ஆட்டோ, ஓட்டுனர் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
News January 1, 2026
ஈரோடு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

உங்களது இடம் (அ) வீடு கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க


