News December 27, 2024

8 மடங்கு மோசடி அதிகரிப்பு.. ரூ.21,397 கோடி அம்பேல்

image

வங்கிகளில் 2025 நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.21,397 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2023இல் இதே காலகட்டத்தில் ரூ.23,863 கோடி மோசடி நடந்ததுள்ளது. இது 2024இல் ரூ.13,175 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2025 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இது அதிகரித்துள்ளது. மொத்தம் 18,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 8 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News July 9, 2025

அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடக்கூடாது: CS

image

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் சர்குலர் அனுப்பியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் சம்பளமும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.

News July 9, 2025

கோயிலில் இருந்து வரும் போது… இத பிறருக்கு தராதீங்க

image

கோயிலில் இருந்து திரும்பும் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. கோயிலின் மணியை அடித்துவிட்டு வெளியே வருவது, கோயிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டுவிடும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!

News July 9, 2025

நமீபியா புறப்பட்டார் PM மோடி

image

பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி பேசினார். இதனையடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

error: Content is protected !!