News December 27, 2024
“வரலாறு என்னிடம் கருணை காட்டும்”

2004 முதல் 2014 வரை இந்திய நாட்டின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் காலமானார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அவருடைய அமைதியான சுபாவம் மிகுந்த விமர்சனங்களை பெற்றது. 2014ஆம் ஆண்டு ஆட்சிக் காலம் நிறைவடைந்தபோது “வரலாறு என்னிடம் கருணை காட்டும்” என்று அவர் கூறினார். அவர் சொன்னது போலவே, அடுத்த சில ஆண்டுகளில் அவருடைய சாதனைகளை அனைவரும் பாராட்டத் தொடங்கினர்.
Similar News
News August 16, 2025
அமலாக்கத்துறையிடம் ஐ.பி., சொன்ன விஷயம்..

திமுகவின் சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் ED ரெய்டு நடந்து வருகிறது. வீட்டிற்கு வந்த அதிகாரிகளிடம் ஐ.பி., பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ”இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென்மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது. தேர்தல் வேலையை முடக்கவே இந்த ரெய்டு. முடங்கி போகமாட்டேன். என்ன செய்யணுமோ செய்யுங்க” என அதிகாரிகளிடம் ஐ.பி., கூறியுள்ளதாக தகவல்.
News August 16, 2025
மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார். தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!
News August 16, 2025
USA வரிவிதிப்பால் தமிழகத்திற்கே அதிக பாதிப்பு

USA-வையே அதிகளவில் தமிழக தொழில்துறை சார்ந்திருப்பதால், USA-வின் அதிக வரிவிதிப்பால், மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கே அதிக பாதிப்பு என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக PM மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், வர்த்தகத்தை மீட்டெடுக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். உற்பத்தி துறை நெருக்கடியில் உள்ளதால் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.