News December 26, 2024
அவிநாசி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி

திருப்பூர், அவிநாசி, மங்கலம் சாலையில், லாரி, கார் நேருக்கு நேர் மோதி, இன்று விபத்து ஏற்பட்டது. இதில் பழங்கரை பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவ்வழியே சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 19, 2025
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருப்பூர் தமிழர்!

யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான NDA கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன். கோவையில் இருந்து 1998 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 2023-ல் ஜார்க்கண்ட் ஆளுநராகவும், 2024 முதல் மகாராஷ்டிரா ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார்.(SHAREit)
News August 19, 2025
திருப்பூர்: பெண்ணிடம் ஆபாச சைகை காட்டிய நபர் கைது

திருப்பூர் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருநகர் பகுதியில் பெண் ஒருவர் மொட்டை மாடியில் துணி துவைக்க சென்றுள்ளார். அப்போது பெரியசாமி என்பவர் ஆடை இல்லாமல் அப்பெண்ணின் எதிரே நின்று ஆபாசமான சைகையை காட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மத்திய போலீசார் பெரியசாமி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News August 18, 2025
திருப்பூர்: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை!

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <