News December 26, 2024
1313 மெட்ரிக் டன் யூரியா நெல்லை வருகை

பிசானப்பருவ சாகுபடிக்காக விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்திற்கு 350 மெட்ரிக் டன்னும் தென்காசி மாவட்டத்திற்கு 583, தூத்துக்குடி மாவட்டத்திற்கு 155, குமரி மாவட்டத்திற்கு 185 மெட்ரிக்டன்னும் பிரித்து அனுப்பப்பட்டது. இந்த உரம் கங்கைகொண்டான் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அவசர தேவைக்காக 80 டன் திருநெல்வேலியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
நெல்லை: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 21ம் தேதியன்று காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். வேலைதேடுநரும் கல்வி சான்றுடன் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களுக்கு நெல்லை Employment Office டெலிகிராம் சானலைப் பயன்படுத்தலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
நெல்லை போலீசில் பணியாற்ற வாய்ப்பு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் காத்தி மணி உத்தரவுபடி மாநகர ஊர்க்காவல் படையில் புதிய நபர்கள் சேர்க்கைக்கான தேர்வு வருகிற 22ஆம் தேதி பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெறும். 60 ஆண்கள் 5 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
நெல்லையில் அரிவாள் வெட்டு; 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

மறுகால்குறிச்சி கே ஜே நகரை சேர்ந்த இளைஞன் நாங்குநேரி பகுதி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை கடந்த 14ம் தேதி காதல் விவகாரத்தில் சிலர் அறிவாளால் வெட்டினர். காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய மறுகால்குறிச்சியை சேர்ந்த சரவணன், ராஜா மற்றும் இரண்டு இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டனர்.


