News December 26, 2024
கறம்பக்குடி அருகே 2 சிறுவர்கள் பலி

கறம்பக்குடி அருகே ஆத்தங்கரைவிடுதி தெற்குப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கொட்டகை போடுவதற்காக வீட்டின் முன்பு பள்ளம் தோண்டியுள்ளார். இதில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் அஸ்வின் (12), பழனிவேல் மகன் புவனேஸ்வரன் (9) இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மழையூர் போலீசார் விசாரித்தனர்.
Similar News
News August 27, 2025
புதுகை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

புதுகை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News August 27, 2025
திருமயம் அருகே கார் மோதி ஒப்பந்த தொழிலாளர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பூங்குடியைச் சேர்ந்தவர் குமாரராஜா(31). இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பட்டினம் அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் சூரியா(31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 27, 2025
புதுக்கோட்டை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <