News December 25, 2024
11 பேரை துடிக்கத் துடிக்க கொன்ற சைக்காே

பஞ்சாபில் முன்னாள் ராணுவ வீரர் உள்பட 11 ஆண்களை லிப்ட் கொடுத்து அழைத்து சென்று பாலியல் வன்காெடுமை செய்து கொன்ற சைக்காே கைது செய்யப்பட்டுள்ளான். செளரா கிராமத்தை சேர்ந்த ராம் ஸ்வரூப் என்பவனை போலீசார், வேறு வழக்கில் பிடித்து விசாரித்தபோது 11 பேரை 18 மாதங்களில் துடிக்க துடிக்க கொன்றதும், ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்ததால் அவனை குடும்பத்தினர் பிரிந்து சென்றதும் தெரிய வந்துள்ளது.
Similar News
News July 8, 2025
பெண்களுக்கு அரசு வேலைகளில் 35% இட ஒதுக்கீடு!

அனைத்து அரசு துறை பணிகளிலும் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பிஹார் CM நிதிஷ் குமார் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள அம்மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலை ஒட்டி, அவர் இந்த அறிவிப்பை கொடுத்துள்ளார். மேலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க & அதற்கான பயிற்சியை கொடுக்க பிஹார் யூத் கமிஷன் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News July 8, 2025
பள்ளி வேன் விபத்து… அதிர்ச்சியூட்டும் புதிய திருப்பம்

கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே கேட்டை வேன் ஒட்டுநர் அலட்சியமாக கடந்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் தூங்கியதால் இந்த கோர விபத்து நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கு பிறகும் கேட் கீப்பர் வெளியே வரவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அலட்சியத்தால் 3 மாணவர்கள் பலியானது பெரும் சோகம்.
News July 8, 2025
அன்புமணியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் தனது மகள் காந்திமதியை, ராமதாஸ் மேடையில் அமர வைத்தது குறிப்பிடத்தக்கது.