News December 25, 2024
செங்கம் அருகே ஒருவர் கொலை

செங்கம் அடுத்த கோ-புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜாகண்ணு மகன் வெங்கடேசன்(40). இருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், மாம்பாக்கத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் முருகன் என்பவர் வெங்கடேசனை தலையில் இரும்பு கத்தியால் வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 13, 2025
தி.மலையில் கள ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் திருவண்ணாமலை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.13) கள ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று செயல்பட்டுவரும் பல் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
News August 13, 2025
கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு மானியம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 132 விவசாயிகளிடமிருந்து 10,712.387 டன் கரும்பு பெறப்பட உள்ளது. அகல பார் அமைத்து பருசீவல் நாற்று, ஒரு பருக்கரணை நடவு உள்ளிட்ட முறைகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய திட்டங்கள் மூலம் ஹெக்டருக்கு ரூ.3,000 – ரூ.18,625 வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
தி.மலை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <