News March 24, 2024
செங்கல்பட்டு: முன்னாள் அமைச்சர் காலமானார்

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று (1989) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி மாறி அதிமுகவில் இணைந்து கட்சியில் அச்சரப்பாக்கம் சட்டமன்ற தனி தொகுதியில் (1991 To 95) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ராமகிருஷ்ணன் இன்று (மார்ச்-24) காலமானார்.
Similar News
News November 28, 2025
செங்கை: கடையில் பிரச்னையா..? உடனே CALL!

செங்கை மாவட்ட மக்களே.., கடையில் வாங்கிய பொருட்களை உரிமையாளர் மாற்றி தரவோ (அ) பணத்தை திரும்ப தரவில்லை என்றாலோ நுகவோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். வாங்கிய பொருட்களை 15 நாட்களுக்குள் எந்தவித சேதாரமும் இல்லாமல் இருந்தால் அதை கண்டிப்பாக மாற்றியோ (அ) பணத்தை திரும்ப தரவோ வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (04427422418) தொடர்பு கொள்ளலாம். ( SHARE )
News November 28, 2025
செங்கை: கல்லூரி மாணவி தற்கொலை!

செங்கை: கடலூர் மாவட்டம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(19). இவர் வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கி, அதே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் கல்லூரி விடுதி அறையில் மாணவி மகாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 28, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (நவம்பர்-27) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


