News December 24, 2024

அல்லு அர்ஜூனிடம் போலீஸ் தீவிர விசாரணை

image

புஷ்பா பட கூட்டநெரிசலில் ரசிகை உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜூனிடம் போலீசார் 3 மணி நேரமாக தீவிர விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது. இதையேற்று ஹைதராபாத் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார். அவரிடம், பாேலீஸ் அனுமதி மறுத்ததையும் மீறி தியேட்டருக்கு வரும் முடிவை எடுத்தது ஏன் என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Similar News

News July 7, 2025

பெருங்கவிக்கோ உடல் குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

image

மூத்த தமிழறிஞரான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி உயிரிழந்த அவரது உடலுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யவும் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், 30 குண்டுகள் முழங்க சேதுராமனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP

News July 7, 2025

2010 முதல் விலையே மாறாது Parle G-யின் ரகசியம் தெரியுமா?

image

எவ்வளவு விலைவாசி உயர்வுகள் வந்தாலும், Parle G விலை மட்டும் எப்படி விலை உயரவே இல்லை என்ற டவுட் பலருக்கும் உண்டு. விலைக்கு பதிலாக, நைசாக வேறொரு வழியில், விலைவாசி உயர்வை கையாண்டு வருகிறது Parle G நிறுவனம். 2010-ல் ₹5-க்கு 60 கிராம் பிஸ்கட் பாக்கெட் விற்கப்பட்டது. ஆனால், அது 2015-ல் 50 கிராமும், 2018-ல் 38 கிராமும், 2020-ல் 33 கிராமும், தற்போது 30 கிராமும் வழங்கப்படுகிறது. ஆனால் விலை ₹5 தான்.

News July 7, 2025

நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.

error: Content is protected !!