News December 24, 2024
திருமலை டிக்கெட் அரை மணி நேரத்தில் ஓவர்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள் தொடங்கிய 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஜன.10ஆம் தேதி முதல் ஜன.19ஆம் தேதி வரை நடக்கும் வைணவர்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாளொன்றுக்கு 14,000 பக்தர்கள் வீதம் 10 நாள்களுக்கு 1,40,000 பேருக்கான முன்பதிவு காலை 11 மணிக்குத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே நிறைவடைந்ததால் காத்திருந்த பக்தர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
Similar News
News September 10, 2025
வீட்டில் இருந்தே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்!

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க வசதி இருக்கிறது. www.tnpds.gov.in இணையதளத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். 30 – 45 நாள்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும். SHARE IT.
News September 10, 2025
Parenting: ஆண் குழந்தைகளுக்கும் இதை சொல்லிக் கொடுக்கலாமே!

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு பெற்றோர்கள் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தைகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு தேவைப்படும் என பலருக்கு தெரிவதில்லை. ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதால் அவர்களுக்கும் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இதை இன்றே கற்பியுங்கள். SHARE.
News September 10, 2025
BREAKING: செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டார்

RB உதயகுமாரின் தாய் குறித்து பேசியதற்கு செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டுள்ளார். செங்கோட்டையனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து RB உதயகுமார் வீடியோ வெளியிட்டார். அதுகுறித்து கேட்டபோது, ‘அவரது தாய் இறந்துவிட்டார், முதலில் அதை பார்க்கச் சொல்லுங்கள்’ என செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட அவர், RB உதயகுமாரின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.