News December 23, 2024
இழப்பீடு தருவதாக பயணிகளிடம் பேசும் மோசடி கும்பல்

விமானங்கள் தாமதம் அல்லது ரத்து போன்றவைகளால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு, இழப்பீடுகள் கொடுக்கப்படுவதாக பயணிகளை ஏமாற்றும் மோசடி கும்பல் அதிகரித்துள்ளது. இந்திய விமான நிலைய ஆணையத்தில் இருந்து பேசுவது போல், போலியான செல்போன் அழைப்புகள் மூலம் பயணிகளிடம் பேசி அவர்களின் ஆதார் பான் வங்கிக் கணக்கு விவரங்களை சேகரிக்கும் மோசடி கும்பல் குறித்து, இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News October 1, 2025
செங்கல்பட்டு: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த<
News October 1, 2025
பெரும்பாக்கம்: லாரி மோதியதில் உணவு டெலிவரி ஊழியர் பலி

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் சகாயராஜ் (40). இவர் நேற்று முன்தினம் இரவு உணவு டெலிவரி செய்ய சென்றபோது பெரும்பாக்கம் சர்ச் அருகில் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார், லாரி டிரைவர் சீனு (30) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
News October 1, 2025
செங்கல்பட்டு: ஆடு பண்ணை வைக்கை ஆசையா?

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (ம) கால்நடை வேளாண் அறிவியல் பல்கலை இணைந்து அக்.6-ம் தேதி முதல் நவ.4-ம் தேதி வரை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி அளிக்க உள்ளது. செங்கல்பட்டு அடுத்த காட்டுப்பாக்கத்தில் இதற்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் இளைஞர்கள் (ம) விவசாயிகள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 99405-42371 என்ற எண்ணை அழைக்கலாம். (சிறந்த முறையில் பயிற்சி முடித்தால் ஆட்டுப்பண்ணை வைக்க உதவும்)