News December 23, 2024
யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருந்த 7 பேர் கைது

ஓசூர் மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று மதியம் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடத்திய போது 4 பேர், ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த வெங்கடேஷ் (27), விஜயகுமார் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
Similar News
News August 21, 2025
இலவச இருசக்கர வாகன பழுதுநீக்கும் பயிற்சி

கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்களுக்கு 30 நாள்கள் இலவச இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்குதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர் நாளை (ஆக. 23) தேதிக்குள் அலுவலகத்திற்கு நேரில் சென்று இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.
News August 21, 2025
உங்களுடன் ஸ்டாலின் கட்டுரைப் போட்டி!

2021ம் ஆண்டிற்கு பின் தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் குறித்து ‘உங்களுக்கு பிடித்த திட்டம்’ என்ற தலைப்பில் ஒருப்பக்க கட்டுரை போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றிப்பெறுபவர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசுகளை வழங்க உள்ளார். விருப்பமுள்ளவர்கள் கட்டுரைகளை செப்.20க்குள் ungaludanstalincamp@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு புகைப்படம் (அ) PDF-ஆக அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
News August 21, 2025
தனியார் நிறுவன ஊழியரிடம் 7.74 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரின் கைப்பேசிக்கு வாடஸ் ஆப் மூலம் வந்த தகவலை நம்பி மர்ம நபர்கள் அளித்த தகவல் மூலம் பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக ரூ.77 லட்சத்தை இழந்துள்ளார். இது குறித்து அவர் அளித்த தகவல் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆன்லைன் மோசடிகளில் சிக்காமல் இருங்கள்! தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.