News December 22, 2024

தாம்பரம் நகரத்தின் முதல் மதிமுக செயலாளர் காலமானார்

image

தாம்பரம் மாநகரத்தின் மதிமுக தோற்றுவிக்கப்பட்ட போது முதல் நகர செயலாளராக இருந்தவர் பழனி (80). இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காமல் இருந்து வந்த அவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் அவர் காலமானார். அவரின் உடலுக்கு தாம்பரத்தை சார்ந்த அனைத்துக் கட்சி பிரமுகர்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Similar News

News October 1, 2025

செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

செங்கல்பட்டு மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News October 1, 2025

செங்கல்பட்டு: GST குறைக்கவில்லையா? ஒரு CALL

image

மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்து புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 353 பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்த போதிலும் சில நிறுவனங்கள் விலையை குறைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்களை 1800-11-4000 என்ற toll free எண் தொடர்பு கொண்டு (அ) இந்த<> லிங்க்கில்<<>> சென்று தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News October 1, 2025

பெரும்பாக்கம்: லாரி மோதியதில் உணவு டெலிவரி ஊழியர் பலி

image

பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த உணவு டெலிவரி ஊழியர் சகாயராஜ் (40). இவர் நேற்று முன்தினம் இரவு உணவு டெலிவரி செய்ய சென்றபோது பெரும்பாக்கம் சர்ச் அருகில் சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளிக்கரணை போலீசார், லாரி டிரைவர் சீனு (30) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!