News December 22, 2024
பள்ளிகளுக்கு நாளை கடைசி நாள்

தமிழகத்தில் நாளை 2024ம் ஆண்டில் பள்ளிகள் செயல்படும் கடைசி நாளாகும். மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளையுடன் (டிச.23) அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைகின்றன. அதைத்தொடர்ந்து, 24ம் தேதி முதல் மாணவர்களுக்கு 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. பின்னர், 2025 ஜன.2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
Similar News
News July 6, 2025
தவெக உறுப்பினர் சேர்க்கை: பயிற்சி பட்டறை அறிவிப்பு

2 கோடி உறுப்பினர் சேர்க்கையை இலக்காகக் கொண்டு தவெக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதற்கான பயிற்சிப் பட்டறை வருகிற 8-ம் தேதி பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதில் மாவட்டச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தின் 2 IT Wing நிர்வாகிகளை அழைத்துவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் உள்கட்டமைப்பில் தவெக கவனம் செலுத்தி வருகிறது.
News July 6, 2025
ஜூலை 9 வரை வெப்பநிலை அதிகரிக்கும்: IMD

தமிழகத்தில் பருவமழை குறைந்து மீண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று சென்னை, மதுரை, தஞ்சை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வெயில் (100 டிகிரி பாரன்ஹீட்) சதமடித்துள்ளது. இந்நிலையில், ஜூன் 9 வரை தமிழகத்தில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும் என IMD எச்சரித்துள்ளது. இதனால், வெயில் அதிகமாக இருக்கும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியே செல்வதை தவிருங்கள் மக்களே..!
News July 6, 2025
தேர்தல் வியூகம் தயார்! மாநாட்டு தேதியை அறிவித்த பாஜக

தமிழக பாஜகவின் முதல் மாநாடு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தனிப்பெரும் பலத்தை நிரூபிக்கும் விதமாக அடுத்தடுத்த மாநாடுகளை பாஜக நடத்த திட்டமிட்டுள்ளது. காட்டாங்குளத்தூரில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக இந்த மாநாடு உதவும் என பாஜக நம்புகிறது.