News December 22, 2024

பள்ளிகளுக்கு நாளை கடைசி நாள்

image

தமிழகத்தில் நாளை 2024ம் ஆண்டில் பள்ளிகள் செயல்படும் கடைசி நாளாகும். மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளையுடன் (டிச.23) அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைகின்றன. அதைத்தொடர்ந்து, 24ம் தேதி முதல் மாணவர்களுக்கு 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. பின்னர், 2025 ஜன.2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

Similar News

News September 7, 2025

₹200 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா’

image

இந்தியாவின் முதல் ‘Super Women’ படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’, விரைவில் ₹200 கோடி வசூலை எட்ட உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இப்படம், இதுவரை உலகம் முழுவதும் ₹175+ கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹30 கோடி பட்ஜெட்டில் துல்கர் சல்மான் தயாரித்த இப்படத்தை, டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

News September 7, 2025

நாளை பள்ளி ஆசிரியர்கள் தயாரா இருங்க!

image

2012-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை(செப்.8) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் trb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கான தேர்வு நவம்பரில் நடைபெற உள்ளது. SHARE IT.

News September 7, 2025

CM ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பிளான்

image

ஜெர்மனி, இங்கிலாந்தில் முதலீடுகளை ஈர்க்க சென்ற CM ஸ்டாலின் முன்னிலையில், ₹15,516 கோடி தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து லண்டனில் இருந்து இன்று ஸ்டாலின் புறப்படுகிறார். நாளை காலை 7.30 மணிக்கு சென்னை திரும்பும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து கத்திப்பாரா வரை இந்த வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!