News December 22, 2024

28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல்.. அரசின் திட்டம் என்ன?

image

வரும் 5ஆம் தேதியுடன் 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், தனி அதிகாரிகளை நியமிக்க TN அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அவசரச் சட்ட மசோதா வரும் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. பின்னர், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதிமுக ஆட்சியில் 2016 – 2019 வரை தனி அதிகாரிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News July 6, 2025

அடுத்த இடத்துக்கு முன்னேறும் மணிகண்டன்?

image

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவரான மணிகண்டன், அடுத்ததாக பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளாராம். இதனை நீலம் புரடொக்‌ஷன் தயாரிக்கிறது. இது நடுத்தர மக்கள் மத்தியில் காணப்படும் சாதிய அரசியலை மையமாகக் கொண்டு உருவாகிறதாம். பெரும்பாலும் நடுத்தர வர்க்க ஃபேமிலி ரோலில் நடித்துவந்த மணிகண்டன், அந்த இடத்தைவிட்டு வெளியேறுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News July 6, 2025

₹1,000 உரிமைத்தொகை… நாளை முதல் விண்ணப்பம்..!

image

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்ப படிவம் நாளை (ஜூலை 7) முதல் வீடு, வீடாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தன்னார்வலர்கள் மூலம் வீட்டிற்கே சென்று படிவங்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. படிவங்களை நிரப்பி தேவையான ஆவணங்களுடன், ஜூலை 15-ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களின் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிகளே, ரெடியா..!

News July 6, 2025

நான் ஒரு தனி மனிதன்.. அண்ணாமலை பேச்சில் சூசகம்

image

அதிமுக – பாஜக கூட்டணிக்குள் முரண்பட்ட கருத்து நிலவி வரும் சூழலில், அண்ணாமலையின் பேட்டி பேசுபொருளாகியுள்ளது. பாஜகவின் கூட்டணி ஆட்சி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘நான் ஒரு தனி மனிதன், யாருடைய கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகிவிட்டாரா என நெட்டிசன்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர். உண்மை என்னவாக இருக்கும்?

error: Content is protected !!