News December 22, 2024
தமிழ் திறனறி தேர்வில் சேலம் முதலிடம்

சேலம் மாவட்டத்தில் கடந்த அக்.19இல் தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு நடந்தது. அதில் சேலம் மாவட்டத்தில் 1,500 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதில், மாவட்டத்தில் 157 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக ஓமலூர் அருகே குப்பூரில் செயல்படும் அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் 43 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். இதன்மூலம் மாநில அளவில் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்தது.
Similar News
News November 14, 2025
சேலத்தில் நாளை ஆசிரியர் தகுதி தேர்வு!

தமிழ்நாடு முழுவதும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு ஒன்று மற்றும் இரண்டு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 12 மையங்களில் 4,646 பேர் தேர்வு எழுதுகின்றனர். நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 48 மையங்களில் 18,847 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9:30 மணிக்குள் தேர்வுக்கு வரவேண்டும் இல்லை என்றால் அனுமதி வழங்கப்பாடது!
News November 14, 2025
சேலம்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!
News November 14, 2025
இலவசம்..அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகின்ற நவ.19ஆம் முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி II & IIA – முதன்மைத் (Mains) தேர்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான தொகுதி II & IIA முதல்நிலை (Preliminary) தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் பிருந்தா தேவி அழைப்பு விடுத்துள்ளார்.


