News March 24, 2024
முறையான ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

உத்தமபாளையம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே இன்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிடிஓ நாகராஜ் மற்றும் காவல்துறை ஒருங்கிணைந்து வாகன சோதனை நடத்தினர். அவ்வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட காரை சோதனையிட்டதில் அதில் ரூ.70000 உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக பணத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் சார்நிலை கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News February 12, 2026
தேனி: இவிஎம் செயல் விளக்க மையம் – ஆட்சியர் அறிவிப்பு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் மாதிரி செயல் விளக்க மையங்கள் (EVM Demonstration Center) அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த மையங்களில் மாதிரி சின்னங்களைப் பயன்படுத்தி வாக்களித்து, தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் கவனத்திற்கு!

தேனி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் ஏ.ஐ., தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெப் டெவலப்மெண்ட், ரோபோடிக் ஆட்டோமேஷன் உள்ளிட்ட 40 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அல்லது 8001858687 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News February 12, 2026
தேனி மாவட்டத்தில் 3000 பேருக்கு குடும்ப கட்டுப்பாடு

தேனி மாவட்டத்தில் கடந்த 2025ல் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 3082 பேர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்களுக்கு வாசக்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024 -2025 ல், 21 ஆண்கள், 4299 பெண்கள் என மொத்தம் 4320 பேர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆப்பரேஷன்கள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


