News December 21, 2024
மாணவர்களுக்கான உணவு மானியம் ₹1,400ஆக உயர்வு

விடுதியில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணாக்கர்களுக்கான உணவு மானியத்தை அரசு உயர்த்தியுள்ளது. பள்ளி மாணவர்களின் மானியம் ₹1,000லிருந்து, ₹1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான மானியம் ₹1,100லிருந்து ₹1,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அளவில் இத்துறையின் கீழ் 1,453 பள்ளி, கல்லுாரி விடுதிகள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.
Similar News
News September 5, 2025
அதிமுக ஒன்றுபட்டால் நல்லது: பிரேமலதா ஆதரவு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதுபோல், அதிமுக ஒன்றிணைந்தால் நல்லதுதான் என பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். அதேநேரம், இவ்விவகாரத்தில் அந்த கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதேபோல், NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும், GK வாசனும், அதிமுக மீண்டும் ஒன்றிணைவது வரவேற்கத்தக்கது என செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News September 5, 2025
EXCLUSIVE: அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கம் ஏன்?

<<17618756>>2009-ல் EPS-ஐ <<>>கட்சி பொறுப்பிலிருந்து ஜெயலலிதா நீக்கியதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்கான காரணத்தை விசாரித்த போது, பொய் புகார் ஒன்றில் ஜெயலலிதா அவரை நீக்கியதாகவும், பிறகு உண்மை தெரிந்த உடன் 10 நாட்களில் மீண்டும் இணைத்துக் கொண்டதாகவும் ADMK செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் மீது பல புகார்கள் இருப்பதால் அவர் இதைபற்றி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
News September 5, 2025
வெள்ளி பதக்கத்துடன் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது

சென்னையில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், 386 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை DCM உதயநிதி வழங்கினார். இதில் விருது பெறுபவர்களுக்கு ₹10,000 ரொக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதிக மாணவர் சேர்க்கை, கற்பித்தலில் புதுமை, பள்ளிகளின் நலன் சார்ந்து சிறந்த பங்களிப்பை வழங்குதல் உள்ளிட்டவை விருதுக்கான அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.