News December 21, 2024

வரும் 31ஆம் தேதி அஞ்சல் குறைதீர் கூட்டம்

image

செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வரும் 31ஆம் தேதி செங்கல்பட்டு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. தபால் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு, தொடர்புடைய ஆவணங்களை புகாருடன் இணைத்து வரும் 26ஆம் தேதிக்குள் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 5, 2025

செங்கல்பட்டு: பாலாற்றின் நடுவே அழகிய தீவு

image

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

News August 5, 2025

செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

image

செங்கல்பட்டில் புதிய ரேஷன் அட்டை (மின்னணு கார்டு) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. <>இந்த லிங்கில்<<>> சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதன் மூலம் பெயர் சேர்க்கை, நீக்கம் & உங்கள் முகவரியை மாற்றம் செய்யலாம். ஷேர் பண்ணுங்க! <<17309403>>தொடர்ச்சி<<>>

News August 5, 2025

செங்கல்பட்டு ரேஷன் அட்டைதாரர்களே…

image

புதிய ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்றாலோ (அ) உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ நீங்கள் இந்த தளத்திலே புகார் அளிக்கலாம். முதலில் உங்கள் பெயரை குறிப்பிட வேண்டும். உங்கள் தொலைபேசி எண் & இ-மெயில் முகவரியை உள்ளிட வேண்டும். வகைப்பாடு என்னும் இடத்தில மின்னணு அட்டை கிடைக்க பெறவில்லை என்பதை தேர்வு செய்து உங்கள் புகாரை அனுப்பவும். இதை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!