News December 21, 2024
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே.. தயாராகுங்க!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஜன.1 முதல் பணப்பலன், விடுப்புகள் என அனைத்தையும் களஞ்சியம் ஆப் மூலமாகவே விண்ணப்பிக்குமாறு சம்பளக் கணக்கு அலுவலர் அறிவித்துள்ளார். பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த ஆப் முழு வீச்சில் தயாராகி உள்ளது. இதிலிருந்து, Pay Slip போன்ற தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்கும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Similar News
News March 12, 2026
தங்கையை ரேப் செய்த அக்காவின் காதலன்

சென்னை, ஓட்டேரியில் 14 வயது பள்ளி மாணவியை, அக்காவின் காதலனே பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவுக்கும், அவரது காதலனுக்கும் திருமணம் செய்ய இருவீட்டார் சம்மதம் தெரிவித்ததால், அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அண்மையில் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவான இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
News March 12, 2026
கேஸ் சிலிண்டர் பதுக்கல்.. TN-ல் முதல் முறையாக கைது!

கேஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு <<19343866>>அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தை(ECA)<<>> அமல்படுத்தியது. அதன்படி, கேஸ் சிலிண்டர் பதுக்கி வைத்தால் 3 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், TN-ல் முதல் முறையாக நெல்லையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 17 சிலிண்டர்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஜாக்கிரதை!
News March 12, 2026
இது இருந்திருந்தால் மாணவிக்கு வன்கொடுமை நடந்திருக்காதா?

வீட்டில் கழிப்பறை இல்லாததால் வெளியே சிறுநீர் கழிக்க சென்ற <<19356260>>மாணவி வன்கொடுமைக்கு<<>> ஆளாகியுள்ளார். தூய்மை இந்தியா இயக்கம் மூலம், கிராம & நகர்ப்புற வீடுகளில் கழிப்பறை கட்டித்தரும் திட்டம் 2014-லேயே வந்துவிட்டது. இந்நிலையில், 12 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கிராமங்களில் சில வீடுகளில் கழிப்பறை இல்லையா எனவும், அது இருந்திருந்தால் மாணவிக்கு இக்கொடுமை நடந்திருக்காது என்றும் பலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து?


