News March 24, 2024

காஞ்சிபுரம் அருகே சோகம்

image

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமரன் (45). இவர் ஶ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தார். நேற்று பணியில் இருந்த முத்துக்குமரன் ஸ்ரீபெரும்புதூரில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் சாலை இணையும் கூட்டு சாலையில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருக்கும் பொழுது லாரி மோதியதில் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News September 8, 2025

காஞ்சிபுரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

காஞ்சிபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News September 8, 2025

கட்சியில் இருந்து நீக்கியதற்கு இனிப்பு கொடுத்து கொண்டாட்டம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னாள் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா வருகை தந்திருந்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் கட்சியிலிருந்து நீக்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து இனிப்புகள் வழங்கினார். உடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News September 8, 2025

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடும் சோதனை

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, மனு கொடுக்க வருபவர்களின் பைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சோதனை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்

error: Content is protected !!