News December 21, 2024

NLC விவகாரத்தில் கோபம் வராதது ஏன்? அன்புமணி

image

கடலூர் NLC சுரங்க விவகாரத்தில் CM ஸ்டாலினுக்கு கோவம் வராதது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை சுட்டிக்காட்டிய அவர், கடலூரிலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், 1956ஆம் ஆண்டிலிருந்து 50,000 ஏக்கர் விவசாய நிலங்களை NLC நிர்வாகம் அழித்துவிட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Similar News

News July 5, 2025

தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

image

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News July 5, 2025

புதினாவுக்குள் இவ்வளவு ரகசியம் இருக்கா?

image

புதினாவை பிரியாணி உள்ளிட்ட உணவுகளில் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. தலைவலி முதல் பாதங்களில் ஏற்படும் வலி வரை சரிசெய்ய புதினா உதவும். *அஜீரணக் கோளாறுகளை குணப்படுத்தும் *நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்சினையைச் சரிசெய்யும் *பெப்பர்மின்ட் ஆயில் மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்கும் * பெப்பர்மிண்ட் ஆயிலில் மசாஜ் செய்தால் புத்துணர்ச்சி கிடைக்கும்.

News July 5, 2025

நீரவ் மோடியின் தம்பி அமெரிக்காவில் கைது

image

வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். நீரவ் மோடியின் மோசடியில் நேஹலுக்கும் தொடர்புள்ளதாக கூறி இந்திய அதிகாரிகள் அளித்த நோட்டீஸில் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த நீரவ் மோடி, 2018-ல் இந்தியாவில் இருந்து தப்பிய நிலையில், லண்டனில் 2019-ல் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

error: Content is protected !!