News December 20, 2024

விவசாயிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

image

காரைக்காலில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிர் செய்யப்பட்ட நெல் பயிருக்கு நிவாரணம் வழங்க புதுவை அரசு உத்தேசித்துள்ள நிலையில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் தரவுகள் கணக்கெடுக்கப்பட்டு விண்ணப்ப படிவங்கள் உழவர் உதவியகங்களில் வழங்கப்பட்டு வருகிறது. அதனை விவசாயிகள் பெற்று சரிபார்த்து வரும் 26ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

image

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

புதுவை ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது

image

ஹோலி பண்டிகையை, மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. இதனால் இன்று (மார்ச் 04) ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு (OPD) இயங்காது என புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே, வெளியூர்களில் இருந்து புறநோய் சிகிச்சைக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்கவும். மேலும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

புதுச்சேரி: 14 மீனவர்களை விடுவித்த இலங்கை

image

இலங்கை கடற்படையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு படகோட்டிக்கு 6 மாதம் சிறை தண்டனையும் இலங்கை நீதிமன்றம் விதித்துள்ளது.

error: Content is protected !!