News December 20, 2024

தைல மரக்காட்டில் ஆண் சடலம்

image

ஆதனக்கோட்டை அருகே சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (40). இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகன்கள் உள்ளன. இந்நிலையில் சரவணன் பெருங்களூர் பகுதியில் உள்ள தைலம் மரக்காட்டில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News August 27, 2025

திருமயம் அருகே கார் மோதி ஒப்பந்த தொழிலாளர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பூங்குடியைச் சேர்ந்தவர் குமாரராஜா(31). இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று பட்டினம் அருகே பைக்கில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவர் சூரியா(31) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 27, 2025

புதுக்கோட்டை: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 27, 2025

புதுக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க..

image

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!