News December 20, 2024

நீதிமன்ற வளாகத்தில் கொலை

image

நெல்லை நீதிமன்ற வாசலிலேயே ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. பழைய கொலை வழக்கில் ஆஜராக வந்த மாயாண்டியை கோர்ட்டுக்குள் பதுங்கியிருந்த 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். உடனடியாக அவர்கள் கைதும் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தமிழத்தில் சட்ட ஒழுங்கு கேளிக் கூத்தாகியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் EPS கண்டனம் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 3, 2025

ஏலத்தில் இந்த வீரரை CSK வாங்கும்: அஸ்வின்

image

2026 ஐபிஎல் ஏலத்தில் CSK அணி டிம் சீஃபர்ட்டை வாங்கும் என அஸ்வின் கணித்துள்ளார். தனது யூடியூப் சேனலில் அவர், CSK அணியில் கான்வே அல்லது ரச்சின் தொடரவில்லை என்றால் தொடக்க வீரராக டிம் சீஃபர்ட்டை ஏலத்தில் வாங்க கூடும் என்றார். ஒரு வேளை CSK அவரை வாங்க தவறினால், வேறு அணிகள் அவரை நிச்சயம் வாங்க கூடும் என அஸ்வின் தெரிவித்தார். டிம் சீஃபர்ட் சமீபத்தில் CPL-ல் 53 பந்தில் 125 ரன்கள் குவித்திருந்தார்.

News September 3, 2025

சாதிப் பெருமை பேசினால் முதலாளியாக முடியாது: திருமா

image

அம்பானி, அதானிக்காக பாஜக அரசு பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். நமது இளைஞர்கள் சாதிப் பெருமை பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் எனவும், அவர்களால் கார்ப்பரேட் முதலாளியாக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வரிவிதிப்பால் அம்பானியோ, அதானியோ பாதிக்கப்பட போவதில்லை, மாறாக சாதாரண மக்கள் தான் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 3, 2025

விரைவில் நல்ல செய்தி: FM நிர்மலா சீதாராமன்

image

அமெரிக்காவின் 50% விரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என FM நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண டெல்லியில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார். மேலும் இந்த விஷயத்தில், ஏற்றுமதி செய்யும் அனைவருக்கும் மத்திய அரசிடமிருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று FM தெரிவித்தார்.

error: Content is protected !!