News December 20, 2024

CM முதல் சிறை வரை.. யார் இந்த சவுதாலா?

image

ஹரியானாவின் அடையாளம், 4 முறை CM என்ற பெருமையை பெற்ற <<14931808>>சவுதாலா<<>>, டெல்லி திகார் சிறையில் மூத்த கைதி என்ற வரலாற்றுக்கும் ஆளானவர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு முறைகேடு வழக்கில் சிக்கிய சவுதாலாவுக்கு, 2013 ஆம் ஆண்டு சிபிஐ கோர்ட் 16 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பதரை ஆண்டுகள் சிறையிலிருந்த அவர் 2021 ஜூலையில் விடுதலையானார். இவர் Ex Dy PM சவுத்ரி தேவிலாலின் மகன் ஆவார்.

Similar News

News September 3, 2025

ஓணம் பண்டிகை: சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

image

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு ஓணம் பண்டிகை வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். 5-ம் தேதி திருவோண சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து 7-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

News September 3, 2025

TNPSC வினாத்தாளில் தவறு: நயினார் ஆவேசம்

image

ஐயா வைகுண்​டரை பற்றி TNPSC வினாத்தாளில், ‘God of hair cutting’ என்று இழி​வாகக் குறிப்​பிடப்​பட்​டதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐயா வைகுண்டரை ‘முடிசூடும் பெருமாள்’ என மக்கள் அழைக்கும் நிலையில், மொழிப்பெயர்ப்பில் அவரது பெயர் இழிவுபடுத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். தன் தந்தை குறித்து இதேபோல் தவறாக குறிப்பிட்டால் CM பேசாமல் இருப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.

News September 3, 2025

மூலிகை: நன்மைகளை வாரி வழங்கும் மணத்தக்காளி கீரை!

image

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,
➤மணத்தக்காளி பழங்களை உலர வைத்து வற்றலாக சாப்பிட்டால், காய்ச்சலின் போது ஏற்படும் வாந்தி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.
➤மணத்தக்காளி இலைச் சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண் மறையும்.
➤மணத்தக்காளி இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவை நீங்கும். SHARE IT.

error: Content is protected !!