News December 20, 2024
மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மாற்றி மாற்றி யூ-டர்ன் அடித்து வருகிறது. நேற்று ஆந்திராவை நோக்கி சென்ற அது, அடுத்த இரு தினங்களுக்கு வலுப்பெற்று மீண்டும் தமிழகம் நோக்கி வரும் என்றும் 24ஆம் தேதி டெல்டா பகுதிகளில் கரையைக் கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வரும் 23ஆம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News September 17, 2025
குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இதுபோதும்

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க இஞ்சி பூண்டு மிக நல்லதாம். நோயெதிர்ப்பு சக்தி கொண்ட இவற்றை குழந்தைக்கு சரியான முறையில் கொடுப்பதன் மூலம் பாதுகாப்பாக வளர்வார்கள். ஒரு வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு ஒரு பல் பூண்டை பாலில் சேர்த்து வேகவைத்து மசித்து கொடுக்கலாம். இஞ்சியை தேவையான அளவு உணவில் கலந்து கொடுத்தால் செரிமானம் நன்றாக இருக்கும். SHARE IT.
News September 17, 2025
BREAKING: விஜய் கட்சியினருக்கு எச்சரிக்கை

தவெக தலைவர் விஜய், தூத்துக்குடியில் அக்.11-ம் தேதி பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரி போலீஸில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், விஜய் வரும்போது தவெகவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரித்துள்ளது. விஜய்யின் தேர்தல் பரப்புரைக்கான அனுமதியை போலீஸ் பாரபட்சமின்றி பரிசீலிக்க <<17735795>>தவெக கோர்ட்டை நாடியது<<>> குறிப்பிடத்தக்கது.
News September 17, 2025
உலக கிரிக்கெட்டின் உச்சம் தொட்ட தமிழர்!

ICC வெளியிட்டுள்ள ஆண்கள் T20 பவுலிங் தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி(733 புள்ளிகள்) முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். T20 கிரிக்கெட்டில் பும்ரா & ரவி பிஷ்னோய்க்கு பிறகு, முதல் இடத்துக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையையும் வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார். ஆசிய கோப்பையில் UAE & பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக அவர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.