News December 20, 2024
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நாளை நடத்த ஆணை

கனமழை காரணமாக 6 – 12ஆம் வகுப்பு வரை தள்ளி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, நாளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த சுற்றறிக்கையில், எந்தெந்த மாவட்டங்களில் மழையால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டதோ, அங்கெல்லாம் நாளை தேர்வு நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்த, மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
EPS பயணம் தோல்வி பயத்தை காட்டுகிறது: சேகர் பாபு

EPS-ன் சுற்றுப்பயணத்தால் எந்த பலனுமில்லை என அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், EPS தொடங்கியுள்ள சுற்றுப்பயணம் தோல்வி பயத்தை காட்டுவதாக தெரிவித்தார். மேலும் அவருடைய பயணத்தை, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்பதற்கு பதிலாக ‘சம்பாதித்ததை காப்போம்- சம்மந்தியை மீட்போம்’ என்று எடுத்துக் கொள்ளலாம் என சேகர் பாபு கிண்டல் செய்துள்ளார்.
News September 2, 2025
₹47 லட்சம் வருமானம்: ஆனாலும் மாசம் ₹30,000 புருஷன் தரணும்!

ஜீவனாம்சம் பெறவே பெண்கள் விவாகரத்து பெறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இத்தகவல் மேலும் அதிரவைக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் ₹47 லட்சம் வருமானம் ஈட்டிய பெண் ஒருவர், மெட்ராஸ் ஐகோர்ட்டில் தனது மகனை வளர்க்க கணவரிடம் இருந்து மாதம் ₹30,000 வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அவரின் கோரிக்கையை மறுத்த ஐகோர்ட், விவாகரத்தை உறுதி செய்துள்ளது. இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
News September 2, 2025
BREAKING: தமிழகத்தில் மாஸ்க் அவசியம்.. அரசு அறிவிப்பு

TN-ல் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், மக்கள் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே ஹாஸ்பிடலுக்கு செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.