News December 20, 2024
அமித்ஷா பேச யார் உரிமை தந்தது..? பா. ரஞ்சித்

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித்திடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அமித் ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தான். அதனால், எந்த சக்தி நினைத்தாலும் அம்பேத்கரை தடுக்கவும் முடியாது. மீறவும் முடியாது. பாபா சாஹேப் அம்பேத்கருக்கு ஜெய்பீம்” எனக் கூறினார்.
Similar News
News July 5, 2025
IND Vs BAN கிரிக்கெட் தொடர் மாற்றம்?

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஆக.17, 20 & 23-ல் ஒருநாள் மற்றும் 26, 29 & 31 ஆகிய நாள்களில் டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. அங்கு நிலவும் அரசியல் சூழலால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி வங்கதேசம் செல்ல முடியாத நிலையில், ஏன் வங்கதேச அணியை இந்தியாவுக்கே அழைத்து கொல்கத்தா, ராஞ்சி போன்ற நகரங்களில் தொடரை நடத்தக்கூடாது என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
News July 5, 2025
இன்றே உலகம் அழியும் நாள்? அதிர்ச்சி கணிப்பு

‘புதிய பாபா வாங்கா’ என அழைக்கப்படும் ரியோ தாட்சுகி, இன்று ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கும் என கணித்துள்ளார். நேற்று முன்தினம் ககோஷிமாவில் நிலநடுக்கம், ஷின்மோ எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால், அவரது கணிப்பு உண்மையாகிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். பலர் சுற்றுலாப் பயணங்களை ரத்து செய்துள்ள போதிலும், ஜப்பான் வானிலை மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
News July 5, 2025
ஊக்கமூட்டும் பொன்மொழிகள்

*நீங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருந்தால், அதிலிருந்து தப்பிக்க முயற்சிக்காதீர்கள். அதை நேருக்கு நேர் சந்தித்து அதிலிருந்து வளருங்கள். * உயர்ந்த இலட்சியங்கள் ஒருபோதும் தாழ்ந்தவற்றுக்குக் கீழ்ப்படியக்கூடாது. *பெரும்பாலான அற்புதங்கள் ஏதோ ஒன்றைச் செய்வதன் மூலம் நிகழ்வதில்லை, ஆனால் சில அபத்தமான செயல்களைச் செயல்தவிர்ப்பதன் மூலம் நிகழ்கின்றன.