News December 20, 2024
அமித்ஷா பேச யார் உரிமை தந்தது..? பா. ரஞ்சித்

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித்திடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அமித் ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தான். அதனால், எந்த சக்தி நினைத்தாலும் அம்பேத்கரை தடுக்கவும் முடியாது. மீறவும் முடியாது. பாபா சாஹேப் அம்பேத்கருக்கு ஜெய்பீம்” எனக் கூறினார்.
Similar News
News September 8, 2025
வேளாண் விஞ்ஞானி R.S.நாராயணன் காலமானார்

இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான R.S.நாராயணன்(87) வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் ஆய்வாளராக பணியாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். மேலும், ‘வறட்சியிலும் வளமை’, ‘வாழ்வு தரும் வன வேளாண்மை’, ‘பல்லுயிர் பெருக்கம்’ உள்ளிட்ட ஏராளமான பயனுள்ள நூல்களை எழுதியுள்ளார். இறுதி சடங்கு பிற்பகல் 12 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெறவுள்ளது. #RIP
News September 8, 2025
RECIPE: இந்த டிபன் சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட்!

◆ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால், சோள இட்லி சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் உகந்தது என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
➥வெள்ளைச் சோளம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
➥இவற்றை இட்லி பதத்திற்கு கிரைண்டரில் போட்டு, அரைத்து கொள்ளவும்.
➥பிறகு, 8 மணி நேரம் ஊற வைத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லியாக வார்த்தெடுத்தால், ருசியான சோள இட்லி ரெடி. SHARE IT.
News September 8, 2025
EPS காய் நகர்த்தலுக்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என EPS பேசியிருந்தார். இதற்கு கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓட்டை உடைசல்களை EPS சரி செய்துவிட்டு மற்றதைப் பற்றி யோசிக்கலாம் என விமர்சித்துள்ளார். இப்படியே சென்றால் EPS-ன் அரசியல் வாழ்க்கை ‘உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா’ என்ற நிலைக்கு செல்லும் எனவும் சாடியுள்ளார்.