News December 19, 2024

மாடுகளுக்கு தடுப்பூசி போட குழு அமைப்பு – கலெக்டர்

image

தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களில் 4 மாதத்திற்கு மேல் உள்ள கன்றுகள், நிறைமாத சினை இல்லாத 1,01,328 பசு இனங்களுக்கும் 722 எருமை இனங்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் மேற்கொள்ள 53 கால்நடை மருந்தகங்கள், 3 கால்நடை மருத்துவமனைகளில் உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஷஜீவனா தகவல்.

Similar News

News November 12, 2025

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று (11.11.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையுள்ளவர்கள் அந்த அந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News November 11, 2025

தேனி: விஷ பூச்சியால் பறிபோன இளைஞர் உயிர்

image

உப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (32). இவர் நேற்று முன்தினம் அவரது தோட்டத்தில் இருந்த பொழுது விஷப்பூச்சி ஒன்று அவரை கடித்துள்ளது. அவரை மீட்ட உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று (நவ.10) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.

News November 11, 2025

தேனி: மாடுகளுடன் தகாத உறவு.. ஒருவர் கைது

image

வருஷநாடு, சிங்கராஜபுரத்தை சேர்ந்தவர் கர்ணன். நேற்று முன்தினம் இவரது மாட்டு கொட்டத்தில் இருந்த கேமராக்கள் திருடு போனது. கேமரா வீடியோ பதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியை சேர்ந்த ஜெகன்பாண்டி (22) மாடுகளுடன் தகாத உறவு வைத்துக்கொள்ள முயற்சி செய்து மாடுகளை துன்புறுத்தியதும் அதனை தொடர்ந்து கேமராவை திருடியதும் வீடியோவில் பதிவாகி இருந்தது. புகாரில் வருஷநாடு போலீசார் ஜெகன்பாண்டியை கைது (நவ. 10) செய்தனர்

error: Content is protected !!