News December 19, 2024

நீலகிரியில் மரத்தில் ஓய்வெடுத்த சிறுத்தை

image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, தங்கள் வாகனம் மூலம் வனப்பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் வனத்தில் வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகள், சிறுத்தை மரக்கிளையில் அமர்ந்து ஓய்வெடுத்ததை, ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். மேலும், இதனை வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

Similar News

News March 14, 2026

நீலகிரியில் உங்களுக்கு நிலம் இருக்கா? முக்கிய தகவல்!

image

நீலகிரி மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து புல எண் மற்றும் உட்பிரிவு எண்களை உள்ளிட்டு, உரிய கட்டணத்தைச் செலுத்திப் பழைய உரிமையாளர் மாற்றங்கள் குறித்த ஆவணத்தை தாங்களே டவுன்லோட் செய்து போலி பட்டாக்களை கண்டறியலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

கூடலூர்: மர்ம விலங்கு தாக்கி பசு மாடு பலி

image

கூடலூர் செறுமுள்ளி கிராமம் சர்க்கார் மூலை பகுதியில், வாப்புட்டி என்பவருக்குச் சொந்தமான 4 வயது பசு மாடு கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போனது. இந்நிலையில், நேற்று (13.03.2026) மாலை மர்ம விலங்கு கடித்த நிலையில் அந்தப் பசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!