News December 19, 2024

பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்த கலெக்டர்

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்கு உட்பட்ட கன்னிகாபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (19.12.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ, மாணவிகளின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News August 14, 2025

வேலூர் மாவட்ட SP எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஆக-13) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 55 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

News August 13, 2025

வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். (ஷேர் பண்ணுங்க)

News August 13, 2025

வேலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

image

வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தினை ஒட்டி அனைத்து மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!