News December 19, 2024
செங்கல்பட்டில் சாரல் மழை

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில், காலை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பல்லாவரம், மீனம்பாக்கம், திரிசூலம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், அச்சிறுபாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்கு செல்வோர் சிரமம் அடைந்து வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
செங்கை: G-Pay/ Paytm/ PhonePe யூஸ் பண்றீங்களா? MUST KNOW!

G-Pay/ Paytm/ PhonePe -ல் பணம் அனுப்பும் போது பேமெண்ட் Error என வந்தபின் பணம் தானாக உங்கள் account -க்கு வந்துவிடும். அப்படி வரலைன்னா கவலை வேண்டாம். உங்கள் வங்கியில் HDFC: 18002600, SBI: 18004253800, AXIS: 18001035577, Canara: 18001030 புகார் பண்ணுங்க. மேலும், பணம் திரும்ப 5 நாட்களுக்கு மேலானால், வங்கி உங்களுக்கு தினம் ரூ.100 பெனால்டியாக தர வேண்டும். அதுதான் விதி. ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News March 4, 2026
செங்கை: கரண்ட் கட்? Whatsapp மூலம் எளிய தீர்வு!

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த கவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க
News March 4, 2026
செங்கல்பட்டு புதிய எஸ்.பி பொறுப்பேற்பு

செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக . அய்மன் ஜாமல் இன்று (04.03.2026) பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்பு நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவதோடு, பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


