News December 19, 2024

8 கிலோ கஞ்சாவுடன் திருச்சி வாலிபர் கைது

image

புதுச்சேரியில் பிடிபட்ட கஞ்சா குற்றவாளி இடம் விசாரித்ததில் அதில், அவருக்கு திருச்சி ராம்ஜி நகர் ரமேஷ் (எ) விசுவநாதன் கஞ்சா சப்ளை செய்தது தெரிய வந்தது. நேற்று திண்டிவனம் வந்த விஸ்வநாதனை, ஒதியஞ்சாலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் ஒடிசாவில் இருந்து வாங்கி வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விஸ்வநாதனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 12, 2025

புதுச்சேரி அரசு பள்ளியில் கணித ஷார்ட்கட் பயிற்சி

image

புதுச்சேரி மாநிலம், மண்ணாடிபட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, புராணசிங்குபாளையம் பகுதியில் அமைந்துள்ள பிஎம்ஷ்ரி பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளி கணித ஆய்வகத்தில் கணிதத்தில் ஷார்ட்கட் உத்திகளின் பயிற்சி மற்றும் கணித வினாடி வினாப் போட்டி நடைபெற்றது. இதில் நல்லாசிரியர் விருது பெற்ற கணித விரிவுரையாளர் திருமுருகன் எளிய முறையில் பயிற்சி அளித்தார்.

News September 12, 2025

புதுவை: சுகாதார ஊழியர்கள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

image

புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மொத்தம் 144 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 3-ம்m தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு செப்.24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் நடக்கிறது.

News September 12, 2025

புதுவை: நீட் தேர்வு தர வரிசை பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரி மாநிலத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வில் 800-க்கு 646 மதிப்பெண்கள் எடுத்து புதுவையில் ஆயுஸ்நாத் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த மொத்தம் 1,445 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!