News December 19, 2024
இவர்களா மக்களை காப்பாற்றுவர்?: R.B.உதயகுமார்

அலங்காநல்லூரில் உள்ள கருணாநிதி ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு, தமிழக அரசு ₹8 லட்சம் மின்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாக R.B.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் நடந்த ADMK கூட்டத்தில் பேசிய அவர், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல, தமிழக CMஆக எடப்பாடி பழனிசாமி வருவார் என்றார். மேலும், கரண்ட் பில் கூட கட்ட முடியாத திமுக அரசு மக்களை எப்படி காப்பாற்றும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
Similar News
News September 7, 2025
அதிரடி நீக்கம்.. இபிஎஸ்-ன் புதிய திட்டம்

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரம் என எதிர் அணியினர் சாடினாலும், ஜெயலலிதா மாதிரி தைரியமான முடிவு என EPS-ன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். BJP சார்பில் அழுத்தம் கொடுத்தாலும் மீண்டும் ஒன்றிணைப்பு இல்லை என உறுதியாக உள்ளாராம். பொதுச்செயலாளர் வழக்கில் MHC சாதகமான தீர்ப்பு, BJP ஓவராக அழுத்தம் கொடுத்தால் அவர்களை விட்டுவிட்டு TVK-வுடன் கூட்டணி வைக்கலாமா எனவும் ஆலோசித்ததாக பேசப்படுகிறது.
News September 7, 2025
தமிழர்களின் கவனிப்பு: CM ஸ்டாலின் எமோஷனல்

முதலீடுகளை ஈர்க்க CM ஸ்டாலின் மேற்கொண்ட ஜெர்மனி & UK பயணம் நிறைவடைந்தது. இப்பயணத்தின் போது வெளிநாடு வாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பை பற்றி குறிப்பிட்ட அவர், இத்தனை நாளும் தன்னை சகோதரனாய் எண்ணி கவனித்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், அளவில்லா அன்பு பொழிந்த தமிழ் மக்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.
News September 7, 2025
வீட்டு மின் இணைப்பு.. அரசு புதிய அறிவிப்பு

முந்தைய உரிமையாளரின் ஒப்புதல் பெறும் படிவம் 2-ஐ நுகர்வோரிடம் இருந்து பெற வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. அதேநேரம், விற்பனை பங்கு பிரித்தல், பரிசளித்தல் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் விற்பனை பத்திரம், சொத்து வரி ரசீது, கோர்ட் தீர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமர்பிக்க வேண்டும். வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு காத்திருப்போருக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.