News March 24, 2024
திண்டுக்கல்: இருவர் மீது சரமாரி தாக்குதல்

பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம், மணி ஆகிய இருவரும் நேற்று சாலையில் நடந்து சென்றனர். அப்போது அவ்வழியே மதுபோதையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் இருவரும் ரத்தகாயத்துடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 24, 2025
திண்டுக்கல்: 10th போதும்! தேர்வு இல்லாமல் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விண்ணபிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு<
News August 24, 2025
பழனி அருகே ஓட ஓட வெட்டி கொலை முயற்சி!

திண்டுக்கல்: பழனி நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் அருகே இன்று காலை கணேசன் என்பவரை சின்னகாளை என்பவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, பழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 24, 2025
திண்டுக்கல்: அசைவம் விலை நிலவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை, இன்று (ஆகஸ்ட் 24) அசைவ மற்றும் மீன் வகைகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. ▶️பிராய்லர் கோழி கிலோ ரூ.200 ▶️நாட்டுக்கோழி கிலோ ரூ. 700 ▶️பண்ணைக் கோழி கிலோ ரூ. 400 என விற்கப்படுகிறது ▶️ஆட்டுக்கறி கிலோ ரூ. 900 முதல் ரூ.1100 ▶️வஞ்சரம் மீன் கிலோ ரூ.550, ▶️நெத்திலி கிலோ ரூ. 400, உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன கமெண்ட் பண்ணுங்க