News December 18, 2024

வடகொரியாவுடன் உறவை புதுப்பித்த இந்தியா

image

நீண்ட இடைவெளிக்குப் பின் வடகொரியா உடனான தூதரக உறவை இந்தியா தொடங்கி உள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகளும் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர். அணு ஆயுதம், அதி நவீன ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இத்தகைய டெக்னாலஜிகள் பாக். செல்வதை தடுக்க, இந்தியா வேலையை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News March 10, 2026

தோசை, ஆம்லெட், வடை, பஜ்ஜி சாப்பிட முடியாது

image

TN முழுவதும் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால், ஹோட்டல்கள் முதல் சிறு டீ கடைகள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிலிண்டர் பிரச்னை சரியாகும் வரை பல்வேறு ஊர்களில் ஹோட்டல்கள், டீ கடைகள் இயங்கும் நேரம் பாதியாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், ஹோட்டல்களில் தோசை, ஆம்லெட் கிடைக்காது என்றும் டீ கடைகளில் வடை, பஜ்ஜி போன்றவை கிடைக்காது என்றும் போர்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

News March 10, 2026

TR பாலு, RS பாரதிக்கு ஜெயில் உறுதி: அண்ணாமலை

image

தான் தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளில் TR பாலு, RS பாரதி இருவருக்கும் நிச்சயம் ஜெயில் தண்டனை கிடைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக பாஜக சதித்திட்டம் என RS பாரதி பேசியதாக அவர் மீது அண்ணாமலை வழக்கு தொடர்ந்தார். இன்று, அந்த வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜராகி, RS பாரதிக்கு எதிரான சாட்சியங்களை சமர்ப்பித்துள்ளார்.

News March 10, 2026

FLASH: காய்கறிகள் விலை தலைகீழாக குறைந்தது!

image

<<19343148>>LPG தட்டுப்பாட்டால்<<>> சென்னை, மதுரை, திருச்சி, கோவை, புதுவை உள்ளிட்ட நகரங்களில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. கேஸ் தட்டுப்பாட்டால் கள்ளச்சந்தையில் ₹500 கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, சென்னையில் காய்கறிகள் விலை தலைகீழாக குறைந்துள்ளது. தக்காளி கிலோ ₹10, பெரிய வெங்காயம் ₹10- ₹20, சுரைக்காய்- ₹10, முள்ளங்கி ₹10, கேரட்- ₹20, சின்ன வெங்காயம் ₹20- ₹30-க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!