News December 18, 2024
DO YOU KNOW: சாகித்ய அகாடமி விருது

ஆண்டுதோறும், 24 இந்திய மொழிகளில் (ஆங்கிலம் உள்பட) இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பு செய்பவர்களுக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. 1955-ஆம் முதல் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுடன் சான்றிதழ், ரூ.1 லட்சம் சேர்த்து வழங்கப்படுகிறது. தமிழில் முதல் விருது ‘தமிழ் இன்பம்’ நூலுக்காக ரா.பி.சேதுபிள்ளைக்கு வழங்கப்பட்டது.
Similar News
News September 6, 2025
விஜய் பேச அனுமதி மறுப்பு?

செப்.13-ம் தேதி திருச்சியில் தேர்தல் பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக திருச்சி, அரியலூர், குன்னம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பரப்புரை செய்ய உள்ளார். இதற்காக போலீஸ் அனுமதி கோரிய நிலையில், விஜய் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்கவுரைக்காக திருச்சியில் தவெக தரப்பில் கேட்கப்பட்ட இடங்களில் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லையாம்.
News September 6, 2025
அன்றாடம் சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவுகள்

‘உணவின்றி உயிரில்லை’ என்பது உண்மை தான். ஆனால், இன்றைய காலத்தில் நாம் அன்றாடம் உண்ணும் உணவே பல சமயங்களில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாகி விடுகிறது. பல உணவுகளில் இருக்கும் ஆபத்தை அறியாமலேயே, அவற்றை நாம் உட்கொள்கிறோம். இந்த உணவுகளை தற்போது உடல் ஏற்றுக்கொண்டாலும், எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னென்ன என்று மேல் உள்ள போட்டோக்களில் காணலாம். SHARE IT
News September 6, 2025
5 ஆண்டுகளில் இந்த வேலைகள் இருக்காது: Anthropic CEO

அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பல்வேறு துறைகளில் தொடக்க நிலை வேலைகளை AI காலி செய்துவிடும் என Anthropic CEO Dario Amodei கணித்துள்ளார். இப்போதே, பல நிறுவனங்கள் வேலையாட்களின் எண்ணிக்கையை குறைப்பது பற்றி வெளிப்படையாக பேசிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், மைக்ரோசாஃப்ட், Nvidia நிறுவன அதிகாரிகள், Dario -வின் கருத்துகளை மறுத்து, AI புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் உறுதியாக உள்ளனர்.