News March 24, 2024

வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட அந்நிய செலாவணி

image

இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64,249 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆர்.பி.ஐ வெளியிட்ட குறிப்பில், “மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி, அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 603 கோடி டாலர் உயர்ந்து 56,838 கோடி டாலராக உள்ளது. சர்வதேச நிதியத்தில், நாட்டின் கையிருப்பு 13 கோடி டாலர் உயர்ந்து 469 கோடி டாலராக உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2025

சின்னத்துரை மீதான தாக்குதல்: 2 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்

image

நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னத்துரை மீண்டும் தாக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டகிராம் மூலம் பழகியவர்கள் சின்னத்துரையை தனியாக அழைத்து தாக்கிவிட்டு செல்போனை பறித்துச் சென்றனர். தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த போலீஸ், சங்கரநாராயணன், சக்திவேல் ஆகியோரை கைது செய்துள்ளது. இதில், தொடர்புடைய மேலும் 3 பேரையும் போலீஸ் தேடி வருகிறது.

News April 20, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஏப்ரல் 20- சித்திரை- 07 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:00 PM – 4:00 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶ குளிகை: 3:00 PM – 4:30 PM ▶ திதி: சப்தமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶ பிறை: தேய்பிறை

News April 20, 2025

தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷ்யா

image

ஈஸ்டரை முன்னிட்டு உக்ரைன் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. நாளை ( ஏப்ரல் 21 ) வரை தாக்குதல் நடத்தப்படாது என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் போரை முடிவு கொண்டுவர முடியும் என அமெரிக்கா கூறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து 2022 பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!