News December 18, 2024
இனி வீடு கட்டுறது ஈஸி..

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்திற்கு மேலும் ₹400 கோடி நிதி ஒதுக்கீடு செய்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே ரூ.995.61 கோடி செலவீனம் செய்யப்பட்ட நிலையில், மேலும் ₹400 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்குத் தொகை விடுக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
Similar News
News September 2, 2025
சேலத்தில் ஆவின் பால் கடை வைக்க ஆசையா?

சேலம் மக்களே.., தமிழக அரசின் தாட்கோ(TAHDCO) ஆவின் பாலகம் மானியத் திட்டம் மூலம் உங்கள் ஏரியாவில் நீங்களும் பாலகம் அமைக்கலாம்.
▶️இதற்கு அரசு சார்பாக ரூ.90 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
▶️இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
▶️இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க உரிய ஆவணங்கள் வைத்திருத்தல் அவசியம். இந்த சூப்பர் வாய்ப்பை பயன்படுத்த <
News September 2, 2025
உடலை பாதிக்கும் Tooth Brush.. உடனே மாத்திடுங்க

பற்களை சுத்தமாக வைக்க தினமும் பிரெஷ் செய்தால் மட்டும் போதாது, அந்த பிரெஷ் சரியாக இருக்கிறதா என்பதை பார்ப்பதும் அவசியம். டூத் பிரஷை 3 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என டாக்டர்கள் சொல்கின்றனர். பழைய பிரெஷ்ஷில் பாக்டீரியா, பூஞ்சைகள் இருப்பதால் அது உடலை பாதிக்கலாம். சில சமயங்களில் 3 மாதங்கள் ஆகவில்லை என்றாலும், நீங்கள் நோய் வாய்ப்பட்டு குணமாகும் போது பிரெஷை மாற்றுவது அவசியம். SHARE.
News September 2, 2025
அரசியல் ஆசை குறித்து மனம் திறந்த கிச்சா சுதீப்

தமிழில் ‘நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கிச்சா சுதீப், தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சில நேரங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டுகிறார்கள் என்றும், ஆனால் தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன் எனவும் உறுதியாக கூறியுள்ளார். அதேசமயம், அரசியலுக்கு வந்துவிட்டால் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார்.