News December 18, 2024
அதிகாலை சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி மாத மூன்றாம் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மஞ்சள் நிற உடையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.
Similar News
News September 3, 2025
நாமக்கல்லில் இலவசமாக செடி, விதை பெற அழைப்பு!

நாமக்கல் மக்களே கொய்யா,பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள்,தக்காளி, கத்தரி, மிளகாய்,வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம்.விண்ணபிக்க<
News September 3, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் (NECC) கூட்டம் நேற்று (செப்டம்பர் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது.
News September 3, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 2) இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாமக்கல்: தங்கராஜ் (94981 10895) ராசிபுரம்: கோவிந்தசாமி (94982 09252), ஞானசேகரன் (94981 69073) திருச்செங்கோடு: வெங்கடாசலம் (94981 69150), செல்வராசு (99944 97140), வேலூர்: சுகுமாரன் (87540 02021) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.