News December 17, 2024
யானை தந்தத்தால் பரிசு: உதவி ஆய்வாளர் கைது

விழுப்புரம் வனச்சரக அதிகாரிகளுக்கு யானை தந்தத்தால் ஆன பரிசு பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News May 7, 2025
திருச்சி ரூ.25,000 சம்பளத்தில் வேலை

திருச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் <
News April 30, 2025
அட்சய திருதியையில் இங்கு சென்று வழிபடுங்கள்

அட்சய திருதியை இன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியைக்கு தங்க நகைகள், மஞ்சள் உள்ளிட்ட மங்களகரமான பொருட்களை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. எனவே திருச்சி மக்களே உங்கள் வீட்டின் அருகே உள்ள மகாலெட்சுமி, பெருமாள் மற்றும் குபேரர் கோயிலுக்கு சென்று வழிபட்டு தங்கம், மஞ்சள் மற்றும் கல்உப்பு போன்ற மங்கள பொருட்களை வாங்குங்கள். எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.
News April 30, 2025
அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசு பஸ் எலக்ட்ரானிக் ரிங் ரோட்டில் திடீரென இரும்பு தடுப்பில் மோதியது. இதில் இரும்பு தடுப்பு சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் மோதியது. தொடர்ந்து சிலிண்டர் ஏற்றி வந்த சரக்கு வேனும் மோதி, சாலையில் கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் ரமேஷ் (37) பலத்த காயம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.