News December 17, 2024

பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

மார்கழி மாத பூஜைக்கு தேவை அதிகரித்திருப்பதாலும், பனியின் காரணமாக வரத்து குறைந்திருப்பதாலும் பூக்கள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. கோவையில் மல்லிப்பூ கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2,000 வரை அதிகரித்துள்ளது. முல்லைப்பூ விலை ரூ.1800ஆகவும், அரளி ரூ.600ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் மல்லிகைப்பூ ரூ.2,500ஆகவும், ஜாதிமல்லி மற்றும் முல்லை ரூ.800ஆகவும் அதிகரித்துள்ளது.

Similar News

News September 6, 2025

GST வரியால் வருவாய் இழப்பு: கார்கே வலியுறுத்தல்

image

GST வரி குறைப்​பால் வருவாய் இழப்பு ஏற்படும் மாநிலங்களுக்கு, அந்த இழப்பை மத்​திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய வேண்​டும் என்று மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். GST 2.0-வை வரவேற்பதாக தெரிவித்த அவர், 8 ஆண்​டு​களாக தூக்​கத்​தில் இருந்த மோடி அரசு, தற்​போது விழித்​துக்​கொண்டு ஜிஎஸ்​டியை மறுசீரமைத்​துள்​ளதாக சாடினார். இதற்காக 10 ஆண்டுகளாக காங்., போராடி வந்ததாகவும் கூறியுள்ளார்.

News September 6, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல். ▶குறள் எண்: 450 ▶குறள்: பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல் ▶ பொருள்: நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

News September 6, 2025

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? SK நச் பதில்

image

தமிழ் சினிமாவில் ‘அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?’ என்ற கேள்வி இன்னும் ஓய்ந்தபாடில்லை. தற்போது சிவகார்த்திகேயனிடமும் இதுகுறித்து கேட்க, ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான்’ என பதிலளித்தார். ஏற்கெனவே தனது ரோல் மாடல் ரஜினி என ‘மதராஸி’ பட விழாக்களில் அடிக்கடி அவர் கூறி வந்தார். அதேநேரம், துப்பாக்கியை கையில் கொடுத்த விஜய் பற்றியும் கேள்வி SK-வை சூழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!