News December 17, 2024
பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டியில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தின் பெயிண்ட் குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. விபத்து குறித்து ஓமலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News September 3, 2025
சேலம்: லக்கேஜ் தொலைஞ்சு போச்சா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.
News September 3, 2025
சேலம்: முன் அனுமதி பெற வேண்டும் காவல் ஆணையாளர்!

சேலம் மாநகர எல்லைக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, பேரணி மேற்கொள்ளவோ, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ, குறிப்பிட்ட நாட்களுக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
News September 3, 2025
சேலம் : இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாநகராட்சியில் 3.09.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.