News December 16, 2024

திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும்

image

தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழையும் மற்றும் டிச.,18ஆம் தேதி மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.

Similar News

News September 11, 2025

திருத்தணி வந்த நடிகை ரோஜா

image

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், திரைப்பட நடிகை ஆர்.கே.ரோஜா திருத்தணி ஜாத்திரை திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின் பக்தர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். மேலும், அங்கிருந்தவர்கள் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News September 11, 2025

திருவள்ளூரை வெளுக்க வரும் மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று(செப்.11) காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.

News September 11, 2025

திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (செப் 12) அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!