News December 16, 2024
தருமபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் சட்டமன்ற தொகுதியில் நாதக முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியுள்ளனர். சமீப காலமாக அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் அனைவரும் சீமானின் செயல்பாடு குறித்து சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளனர். அத்துடன், கட்சியில் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லை என்றும் ஆதங்கப்பட்டுள்ளனர்.
Similar News
News September 16, 2025
இந்தியா – USA விவகாரம்: இன்று தீர்வு எட்டப்படுமா?

இந்தியா – USA இடையே இன்று வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க USA அதிகாரிகள் இன்று இந்தியா வர உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தூதரகம், வர்த்தக சிறப்பு அதிகாரிகள், அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயம், பால்பண்ணைத்துறையில் இந்திய சந்தையை திறந்துவிட USA வலியுறுத்தி வரும் நிலையில், இந்திய அரசு அதற்கு மறுப்பதால், ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
News September 16, 2025
7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், வரும் 21-ம் தேதி வரையிலும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
News September 16, 2025
ஒரு லட்சம் வரை குறைந்த SWIFT காரின் விலை

சமீபத்தில் ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களுக்குப் பிறகு, மாருதி சுஸுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஸ்விஃப்ட் மாடலுக்கு ₹1.06 லட்சம் வரையிலும், டிசையர் மாடலுக்கு ₹87,000 வரையிலும் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் Wagon R (₹64,000வரையும்), Celerio (₹63,000), Alto K10 (53,000), S-Presso விலை (53,000) வரையும் குறைகிறது.