News December 16, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு நகல், வங்கி புத்தகம் நகல், புகைப்படம், சிறு குறு விவசாய சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் கடலூர், சிதம்பரம், விருத்தாசலத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 12, 2025

கடலூர் மாவட்டத்தில் 19,908 பேருக்கு தேர்வு

image

கடலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் நவ.15 & 16 ஆகிய 2 நாட்களுக்கு நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் தாள்-1 தேர்வு மையங்களில் 4,191 பேரும், தாள்- 2 தேர்வு மையங்களில் 15,717 பேரும் என மொத்தம் 65 தேர்வு மையங்களில் 19,908 பேர் எழுத உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.

News November 12, 2025

கடலூர்: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக் <<>>செய்து, FILL ENUMERATION FORM என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு உங்களால் ஆன்லைன் மூலமாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ள முடியும்! ஷேர் பண்ணுங்க!

News November 12, 2025

கடலூர்: தவறி விழுந்து பேருந்து ஓட்டுநர் பலி

image

சங்கிலி குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). தனியார் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று இரவு ராமாபுரம் பைபாஸ் சாலை வழியாக டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மணிகண்டன் உடலை கைப்பற்றிய முதுநகர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!