News December 16, 2024
சிவகங்கையில் புதிய பாலம் அமைக்க கோரிக்கை

திருப்புவனம் அருகே நையினார்பேட்டையில் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் 30 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் சூழ்நது நெல் கரும்பு வாழை போன்ற பயிர்கள் சேதமடைந்துவிட்டதாகவும், பைப் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டி தருமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் கோரிக்கை மனு அளித்தார். இந்நிகழ்வில் அப்பகுதி விவசாயிகள் உடன் இருந்தனர்.
Similar News
News August 10, 2025
சிவகங்கை: சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா..?

சிவகங்கை மக்களே நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். தொழிலாளர் இணை ஆணையர் – 04575-240521, தொழிலாளர் துணை ஆணையர் – 04575-240320 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க கண்டிபாக ஒருவருக்காவது உதவும்.
News August 10, 2025
சிவகங்கையில் ஆகஸ்ட் 13 ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, நாட்டாக்குடி படுகொலையை கண்டித்து அதிமுக சார்பில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாத்து, கிரமத்திலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் கிராமத்தில் குடியமர்த்த வலியுறுத்தி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 10, 2025
JUST IN: குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை மாவட்டம் வெட்டிக்குளம் கிராமத்தில் மலை குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெட்டிக்குளம் பாட்டையா கோவிலில் சாமி தரிசனத்திற்காக சென்றவர்களை மலை குளவி கடிதத்தில் பக்தர்கள் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.