News December 15, 2024
தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து பணிகள் நியமன விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (15.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு விளாத்திகுளம், கோவில்பட்டி, மணியாச்சி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் போன்ற பகுதிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
தூத்துக்குடி: பெண்களுக்கு பாதுகாப்பில்லை – சௌமியா

தூத்துக்குடி விமான நிலையத்தில் சௌமியா அன்புமணி (பாமக) செய்தியார்களை சந்தித்தார். அதில், பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் தான் தமிழகத்தில் நிலவுகிறது. 2 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. முன்பு பெரியவர்கள் தான் இந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர். இப்போது சிறுவர்கள் கூட இக்குற்றத்தில் ஈடுபடும் அவலநிலை நிலவுகிறது என அவர் தெரிவித்தார்.
News March 10, 2026
தூத்துக்குடி: மருமகனை கொலை செய்த மாமனாருக்கு ஆயுள்

தூத்துக்குடி கே வி கே சாமி நகரை சேர்ந்தவர் ஹரிகுமார். இவரை கடந்த 2018 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணா நகரை சேர்ந்த இவரது மாமா சுப்பிரமணியன் சத்தியநாராயணன் என்பவருடன் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளார். இது சம்பந்தமாக தூத்துக்குடியில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று சுப்பிரமணியனுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் சத்யநாராயணனை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News March 10, 2026
தூத்துக்குடியில் வாலிபர் தற்கொலை முயற்சி…!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் சார்ந்தவர் வாலிபர் கார்த்திக் ராஜா குடிப்பழக்கம் இவருக்கு இருந்து வந்ததாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடிப்பழக்கத்தை கைவிட குடும்பத்தினர் கூறியதால் இன்று வீட்டில் இருந்த எலி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுக்குறித்து கிழக்கு போலீசார் விசாரணை.


